அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

வெண்பனி

வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும் அழகுடன் பனிப்பொழிவின் காட்சி
சத்தமில்லாமல் இறங்கி கவிதை எழுதும்
சுத்தமான வெண்மையாய் மாறிவிடும் பொழுதும்
ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் நிகழ்வு
வானம்பார்த்து விளையாடி சிறுவர்களோ மகிழ்வு
பனியின் பளிங்கு ஆடையினை மலையும்
அணிந்து அடையாளத்தை மாற்றுகின்ற நிலையும்
கட்டிவிடும் இயற்கை கனவுலகத் தோற்றம்
கொட்டிவிடும் பனியால் வந்ததிந்த மாற்றம்
உண்மையில் இயற்கையின் மென்மையான புன்னகை
வெண்பனி அபூர்வமான பரிசொன்றின் வகை
மனதை வருடிவிடும் இனிமையான அனுபவம்
ஜெயம்

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading