அடையாளம்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-33
20-06-2024

அடையாளம்

சொந்த தேசம் துறந்து
பெற்ற உறவைப் பிரிந்து
சுற்றித் திரிந்த மண்ணை கடந்து
சுகமான நட்பை இழந்து

மூட்டை முடிச்சை கையிலேந்தி.
நாட்டை விட்டு வெளியேறி
வலையில்ப் போட்ட மீனாய்
வந்த அகதி வாழ்க்கை

வலியைச் சுமந்து கொண்டு
விடிவை எண்ணி நாமும்
கிடைத்த அடையாளம் காத்து
வாழ்ந்த காலமிது!

எம் சந்ததிக்கு அடையாளம்
சொந்த மண்ணில் கொஞ்சம்
சோகம் அற்ற வாழ்க்கை .
எந்தன் கனவாய்ப் போச்சா??

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading