கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..

வசந்தா ஜெகதீசன் .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின் கணக்கிலே தமிழரின்...

Continue reading

அடையாளம்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-33
20-06-2024

அடையாளம்

சொந்த தேசம் துறந்து
பெற்ற உறவைப் பிரிந்து
சுற்றித் திரிந்த மண்ணை கடந்து
சுகமான நட்பை இழந்து

மூட்டை முடிச்சை கையிலேந்தி.
நாட்டை விட்டு வெளியேறி
வலையில்ப் போட்ட மீனாய்
வந்த அகதி வாழ்க்கை

வலியைச் சுமந்து கொண்டு
விடிவை எண்ணி நாமும்
கிடைத்த அடையாளம் காத்து
வாழ்ந்த காலமிது!

எம் சந்ததிக்கு அடையாளம்
சொந்த மண்ணில் கொஞ்சம்
சோகம் அற்ற வாழ்க்கை .
எந்தன் கனவாய்ப் போச்சா??

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan