” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அட மனிதா

ஜெயம் தங்கராஜா

கவி 752

அட மனிதா

உறவுகளைச் சுற்றி தத்துரூப நாடகம்
எத்தனை முகமூடிகள் கைதேர்ந்த நடிப்பு
பொருளாசை மண்ணாசை என ஆசைகள் கொண்டு
தன்மனச் சொற்படி பொய்வழிதனில் நடப்பதாயின்று

பொய்மொழிகள் பேசி நல்வழிகாட்டும் புதிய உத்தமர்கள்
ஜம்புலன்களையும் கள்ளப்புலன்களாகவே பாவிக்கும் நவீன உன்னதர்கள்
இந்த உலகச்சிறை கொத்தடிமைகள் கூட்டம்
பொய்வேடமிட்டு இயல்பெனக்காட்டி வையகத்தில் ஆட்டம்

உயிர்களைக்கொன்று உயிர்வாழும் மனிதகுல தன்மை
பாவங்கள் நூறு நாளாந்தம் செய்தே மேன்மை
நீர்க்குமிழி போன்றது உடலென அறிந்திடினும் உண்மை
உண்மையின் நேர்மையின் தன்மையும் சிதைந்ததும் உண்மை

பொல்லாதவைகளை செய்வதில் அப்படியொரு ஈடுபாடு
அடங்காத உள்ளமதன் சொற்படி நிலைப்பாடு
மண்ணுயிரை தன்னுயிராய் நினைக்காதே கொடுமைகள்
ஆற்றலையும் அறிவையும் சீற்றத்தால் தொலைக்கின்ற மடமைகள்

அன்பு என்பது ஆழமாக இல்லாது வற்றிவிட்டது
பக்தி என்பது அறிவுபூர்வமாக இன்றி கேலிக்கூத்தானது
ஏமாற்றுபவர்களும் ஏமாளிகளும் அதிகரித்த உலகம்
சூதாட்ட வாழ்க்கையதன் சீர்குலைந்த பயணம்.

ஜெயம்
05-12-2024

Nada Mohan
Author: Nada Mohan