நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

அதுவொரு கனாக்காலம்

ஜெயம் தங்கராஜா

அது இறக்கைகள் இல்லாது சிறக்கடித்தகாலம்
இனிமையை அள்ளிப்பருகி துள்ளித்திரிந்த கோலம்
வசந்தம் கூடுகட்ட சுகமும் வசமானதே
நிகழும் பொழுதுகளுக்குள் மகிழ்ச்சி நிசமானதே

படிப்பும் துடிப்பும் பாடசாலையும் இல்லமுமாக
தட்டிக்கொடுப்பு அரவணைப்பில் பெற்றோரின் செல்லமுமாக
கூடிச் சந்தோசித்து எத்தனையெத்தனை
விளையாட்டு
ஊற்றெடுக்கும் உற்சாகத்தை மூலதனமாய் போட்டு

சுகந்தத்தை உள்வாங்கியே பதித்திட்ட காற்தடம்
அற்புதமும் அதிசயமும் உற்பவிக்கும் வாலிபத்திடம்
மீண்டும் வாராத அதுவொரு கானாக்காலம்
மீட்டிவிட நினைவுகளை பூரிப்பிலே நாளும்

Nada Mohan
Author: Nada Mohan