” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அது அந்தக்காலம் இது இந்தக்காலம்

ஜெயம்

இயற்கையோடு உறவாடி இயற்கையாக வாழ்ந்தது அந்தக்காலம்
செயற்கையை நுழைத்து உண்மையாய் செயற்படாமல் வாழ்வது இந்தக்காலம்
மனித சக்தியால் உழைத்து நீடூழி வாழ்ந்தது அந்தக்காலம்
இயந்திரத்தின் கடுகதிக்குள் சிக்கி சீரழிந்து வாழ்வது இந்தக்காலம்

நூலகம் தேடிச்சென்று ஞாபகப்படுத்தும் அறிவைப்பெற்றது அந்தக்காலம்
இணையவழியாக விழியினைக்கெடுத்து அறிவை அடைவது இந்தக்காலம்

சொந்தம் பந்தமென கூடிய கூட்டு வாழ்க்கை அந்தக்காலம்
தனிமையும் வெறுமையும் துணையாக தவிச்சு வாழுவது இந்தக்காலம்
காதலையும் மானத்தையும் உயிராய் நினைத்தது அந்தக்காலம்
பணத்தை கண்டுவிட்டால் அலைபாயும் உறவுநிலை இந்தக்காலம்

வாழ்க்கை துணையை பெற்றோர் தேடுவார் அந்தக்காலம்
வாழ்க்கை துணைசொல்ல, பெற்றோர்கள் வாயோதிபமடத்தில் இந்தக்காலம்

Nada Mohan
Author: Nada Mohan