பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

அது அந்தக்காலம் இது இந்தக்காலம்

ஜெயம்

இயற்கையோடு உறவாடி இயற்கையாக வாழ்ந்தது அந்தக்காலம்
செயற்கையை நுழைத்து உண்மையாய் செயற்படாமல் வாழ்வது இந்தக்காலம்
மனித சக்தியால் உழைத்து நீடூழி வாழ்ந்தது அந்தக்காலம்
இயந்திரத்தின் கடுகதிக்குள் சிக்கி சீரழிந்து வாழ்வது இந்தக்காலம்

நூலகம் தேடிச்சென்று ஞாபகப்படுத்தும் அறிவைப்பெற்றது அந்தக்காலம்
இணையவழியாக விழியினைக்கெடுத்து அறிவை அடைவது இந்தக்காலம்

சொந்தம் பந்தமென கூடிய கூட்டு வாழ்க்கை அந்தக்காலம்
தனிமையும் வெறுமையும் துணையாக தவிச்சு வாழுவது இந்தக்காலம்
காதலையும் மானத்தையும் உயிராய் நினைத்தது அந்தக்காலம்
பணத்தை கண்டுவிட்டால் அலைபாயும் உறவுநிலை இந்தக்காலம்

வாழ்க்கை துணையை பெற்றோர் தேடுவார் அந்தக்காலம்
வாழ்க்கை துணைசொல்ல, பெற்றோர்கள் வாயோதிபமடத்தில் இந்தக்காலம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading