மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம்-164 10.03.2022
தலைப்பு!

“ பெண்ணினமே”
பாரதி கண்ட புதுமைப் பெண்ணே
பாருக்குள் உன்புகழ் பெருமிதம் கண்ணே/

பட்டங்கள் பெற்று சட்டங்கள் செய்வாய்
ஏட்டினை தொட்டு நாட்டினை ஆழ்வாய்/

ஆழ்வதும் உன்னாலே -பெண்ணே
அழிவதும் உன்னாலே/

ஆதியும் அந்தமுமாய் மன்றின்
அவதாரம் பெண்ணன்றோ/

தந்தைக்கு மகளானாய் பதிக்கு தாரமானாய்
குழந்தைக்கு தாயானாய் குடும்பத்தின்
குத்துவிளக்கானாய் /

அச்ச மட நான பயிர்ப்பு
அத்தனையும் உன்றன் அழகிய படைப்பு/

அன்பின் கணவருக்கும் அழகிய குழந்தைக்கும்
அருகில் சுற்றத்திற்கும் அன்புஒளி நீயன்றோ /

ஓயாத உழைப்பும் ஒருஉயிர் உன்னில்ஜனிப்பு
நீயாக இன்றி வேறுயாரேலே முடியும்/

ஒருதீபக் கல்வியாலே ஒளிதீபம் தந்தவளே
உடல்பொருள் ஆவியும் தானமாய் தந்தாயே/

உன்றனைப் போற்றி பேசிடவே பெண்ணே
உலகினில் நான் பிறப்பெடுத்தேன்/

உன்றன் புகழ்பாடிடவே ஜென்மம்ஏழு போதாது
என்றன் பெண்ணின மகளே பெருமிதமே /

நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading