மாறியதே வாழ்வு…

வசந்தா ஜெகதீசன் மாறியதே வாழ்வு... தினம் தினமாய் திசைமாறும் திருப்பங்கள் பலவாகும் ஆறெனும் நதியோட்டம் அனுதினமும் பெருமன்றம் கூறுபடும் குழப்பங்கள் குறுகி வரும்...

Continue reading

உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை

செல்வி நித்தியானந்தன் (771) உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும் கோலாகலமாக...

Continue reading

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம்-164 10.03.2022
தலைப்பு!

“ பெண்ணினமே”
பாரதி கண்ட புதுமைப் பெண்ணே
பாருக்குள் உன்புகழ் பெருமிதம் கண்ணே/

பட்டங்கள் பெற்று சட்டங்கள் செய்வாய்
ஏட்டினை தொட்டு நாட்டினை ஆழ்வாய்/

ஆழ்வதும் உன்னாலே -பெண்ணே
அழிவதும் உன்னாலே/

ஆதியும் அந்தமுமாய் மன்றின்
அவதாரம் பெண்ணன்றோ/

தந்தைக்கு மகளானாய் பதிக்கு தாரமானாய்
குழந்தைக்கு தாயானாய் குடும்பத்தின்
குத்துவிளக்கானாய் /

அச்ச மட நான பயிர்ப்பு
அத்தனையும் உன்றன் அழகிய படைப்பு/

அன்பின் கணவருக்கும் அழகிய குழந்தைக்கும்
அருகில் சுற்றத்திற்கும் அன்புஒளி நீயன்றோ /

ஓயாத உழைப்பும் ஒருஉயிர் உன்னில்ஜனிப்பு
நீயாக இன்றி வேறுயாரேலே முடியும்/

ஒருதீபக் கல்வியாலே ஒளிதீபம் தந்தவளே
உடல்பொருள் ஆவியும் தானமாய் தந்தாயே/

உன்றனைப் போற்றி பேசிடவே பெண்ணே
உலகினில் நான் பிறப்பெடுத்தேன்/

உன்றன் புகழ்பாடிடவே ஜென்மம்ஏழு போதாது
என்றன் பெண்ணின மகளே பெருமிதமே /

நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan