29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
அபிராமி கவிதாசன்.
கவிஇலக்கம் -165. 17.03.2022
“வாழ்த்திட வந்தேன் மகனே “
என்றன் மடிதனில் மலர்ந்த மகவே
உன்றனை போற்றி வாழ்த்திடவே வந்தேன்
கட்டி என்னில் முத்தம் பதிப்பாய்
கரும்பாய்பேசி கருத்தாய் ஆழ்வாய்
சுட்டி செய்தே சுற்ற வைப்பாய்
சுகமாய் அன்பை உணர்த்திட வைந்தாய்
கண்ணை கட்டி தேட வைப்பாய்
கண்ணில் பட்டு கரும்பாய் நகைப்பாய்
தர்க்கம் செய்து தட்டணை பெறுவாய்
சொர்க்கம் சேர்வாய் சொந்தம் சேர
நட்புடன் ஆட நாட்திசை ஓடி
திட்டம் போட்டு தீர்ப்பும் தருவாய்
பாமுக குழந்தையாய் பல்கலை புரிவாய்
பூமுகம் மலர புத்துணர்வு அளிப்பாய்
வள்ளுவன் பேரினை வாகை சூட்டியே
தெள்ளு தமிழை தெவிட்டாது உரைப்பாய்
அப்பா செல்லம் அன்பில் குறும்பு
அம்மா சொல்லை ஆராதனை செய்வாய்
இல்லக் குறும்பை இனிதாய் படைத்தேன்
செல்ல மகனே செவிதனில் ஏற்பாய்
அன்புடன்
அப்பா அம்மா 🙏💖

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...