மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம் -165. 17.03.2022

“வாழ்த்திட வந்தேன் மகனே “

என்றன் மடிதனில் மலர்ந்த மகவே
உன்றனை போற்றி வாழ்த்திடவே வந்தேன்

கட்டி என்னில் முத்தம் பதிப்பாய்
கரும்பாய்பேசி கருத்தாய் ஆழ்வாய்

சுட்டி செய்தே சுற்ற வைப்பாய்
சுகமாய் அன்பை உணர்த்திட வைந்தாய்

கண்ணை கட்டி தேட வைப்பாய்
கண்ணில் பட்டு கரும்பாய் நகைப்பாய்

தர்க்கம் செய்து தட்டணை பெறுவாய்
சொர்க்கம் சேர்வாய் சொந்தம் சேர

நட்புடன் ஆட நாட்திசை ஓடி
திட்டம் போட்டு தீர்ப்பும் தருவாய்

பாமுக குழந்தையாய் பல்கலை புரிவாய்
பூமுகம் மலர புத்துணர்வு அளிப்பாய்

வள்ளுவன் பேரினை வாகை சூட்டியே
தெள்ளு தமிழை தெவிட்டாது உரைப்பாய்

அப்பா செல்லம் அன்பில் குறும்பு
அம்மா சொல்லை ஆராதனை செய்வாய்

இல்லக் குறும்பை இனிதாய் படைத்தேன்
செல்ல மகனே செவிதனில் ஏற்பாய்

அன்புடன்
அப்பா அம்மா 🙏💖

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading