அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் கவி வாரம் 167
தலைப்பு !
“ பணி “

பணிப்பெண்ணே உன்பணி
பெரும்பணி இல்லத்தில்
இடர்விடா தொடர்பணி
இருதயமே நோகுமடி /

பணிவிடையும் பக்குவமும்
பற்கலையும் கற்றவளே
கூலிபோட்டு வேலைசெய்யின்
குடிமூழ்கி போகுமடி /

பணியோடு பயணிக்க
பலனுண்டு பாரினிலே
துணிவொன்றே வேண்டுமடி
துயரினை வென்றெடுக்க /

ஆயிரம் இன்னல்கள்
அருகினில் பயணிக்க
அத்துனையும் எடுத்தெறியும்
ஆயுதமே பணிக்கருவி /

உயிருள்ள காலம்வரை
உழைத்துண்ணும் தேகமடி
துயிலும் நிம்மதியில்
துவன்றிடா நோயிலடி /

நன்றி வணக்கம்
பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading