” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-244
தலைப்பு! “ கலவரம்”

அன்றாட வாழ்வுதனில் அனுதினமும்,
ஆயிரமாம் வாழ்வியல் கலவரம்!

நன்றாக ஓர்ப்பணி நம்வசம்,
நாள்தோறும் இன்றேல் கலவரம்!

ஒன்றாய் கூடும் உறவுகள்,
ஓர்மாற்று கருத்திடல் கலவரம்

நன்றே நாள்தோறும் செய்தாலும்,
நல்லவர்க்கும் ஓர்கல்லடி கலவரம்

குன்றா உள்ளமுடன் நாள்தோறும்,
கொடுத்துவாழக் குறையும் கலவரம்!

மன்றில் வருவோரைக் வரவேற்று,
மனதாரக் உபசரிக்ககுறையும் கலவரம்!

சென்ற இடம் சிறக்கும் நன்னடதை,
செல்வந்தரையும் நாணச்செய்யும் கலவரம்!

அன்றும் இன்றும் என்றும்,
அன்புடன் வாழ அகலும் கலவரம்!

அபிராமி கவிதாசன்.
05.12.2023

Nada Mohan
Author: Nada Mohan