பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்…267
தலைப்பு! “வேள்வி”

எங்கள் விடுதலை
எங்கே என்பது
எங்கள் கேள்வி! – இன
மொழி உணர்வை நெய்யாய் ஊற்றி
வளர்ப்போம் வேள்வி!

செந்நெல் மணிகளும்
கன்னல் வயல்களும்
சிங்களன் கையிலே – எங்கள்
தேசம் முழுவதும்
நாச மானது
கொடியவன் தீயிலே!

அடக்கு முறைகளும்
ஒடுக்கு முறைகளும்
சொன்னால் கொஞ்சமா ?- சிங்கள
அரசின் இனவெறி
எங்களின் உயிர்ப்பலி
பற்பல இலட்சமே!

புத்தனின் போர்வையில்
இரத்தம் குடித்தவன்
துறவறப் பிக்குவா? – நல்
சமத்துவம் அற்றவன்
ஆள்வதா இன்று
எட்டுத் திக்குமா?

கொத்துச் சரங்களாய்
எம்மின மக்களை
கொன்றவன் காடையன்- தொடர்
கொத்தணிக் குண்டினால்
செத்து மடிந்திட
வைத்தவன் சிங்களன்!

நாகராய் இயக்கராய்
வாழ்ந்தவர் தமிழரே
என்றுபறை சாற்றடா – நம்
உரிமைகள் யாவையும்
பறித்தவன் சிங்களன்
உலகறியக் காட்டடா!

அண்ட வந்தவன்
அடிமையாய் ஆக்கினான்
அறவழி தோற்றது – தலவனின்
மறப்படை எழுந்தது
மலர்ந்தது ஈழமே – பின்
சூழ்ச்சியால் வீழ்ந்தது!

முள்ளி வாய்க்கால்
தமிழர் பிணமாய்
ஆனதுதான் கேள்வி ? – மீண்டும்
தனித்தமிழ் ஈழமே
விடுதலை படைத்திட
வளர்ப்போம் வா!வேள்வி

கவிதை -தொகுப்பில்
நூல்நயம் போலினிக்கும்-கவிஞர்
பாவை அண்ணா – கவிஞர்
மதிமகன் அண்ணா இருவருமே
விடுதலைக் கென்றே
தொடர்க கவிவேள்வி!

அபிராமி கவிதாசன்.
28.05.2024

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading