அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-284. தலைப்பு!

சலவை
……….
மூளைச் சலவை செய்வார் நாட்டில் – அரசியல்
மோசடி ஆட்கள் எல்லாம்
ஓர்படை வீட்டில்!

எத்தனை காலம் ஏமாற்றுவார் மக்களை – அட
அரசியல் வாதிகள் சொல்வார் பொய்களை!

கோவேறு கழுதைகள் என்றும்
குத்திரைகள் ஆகுமா? – ஒரு
கூத்தாடிக் கூட்டத்தால் இந்த
நாடே விடியமா?

கூட்டத்தை வைத்தே நாட்டில்
எடைபோ டாதே – ஒரு
கொள்கை அற்ற கூட்டம்
நிலை கொள்ளாதே!

மாவீரர் கனவை நீ
நனவாக்க மறந்தாயா? – விடுதலை
மறவரை
எண்ணாமல் உயிர் துறந்தாயா?

மாவீரர் கனவையே மறவாது
நனவாக ஆக்கு – ஈழம்
கட்டாயம் மலர நீ
எப்பொழுதும் நோக்கு!

ஈழம் மலராது பல்லோர்
செய்வார் சலவை – அவர்கள்
துண்டாடப் பார்ப்பார்
எம்மக்கள் உறவை!

கார்த்திகைத் திங்கள் புதிதாய்
மலருது பாரடா! – நம்
கவலைகள் எல்லாம் தீரும்
நல்ல நாளடா!

அனுரா அரசியல் அழகாய்
நடக்குது பாரடா! – இனி
அனைத்திலும் நன்மை பிறக்கும் பாரடா!

குழப்படிக் கூட்டம் நடுங்கும் தருணம் இதுவடா – மக்கள்
கூட்டம் ஒன்றாய்க் கூடி
வாழட்டும் இனியடா!

மூளைச் சலவை இங்கே கைக்கூலிகள் தானடா – அந்த
முழு மூடர்கள் நம்மை ஏய்த்திடுவார் பாரடா!

விழிப்புணர் வோடு நீ
இருந்திடப் பழகு! – ஈழ
விடுதலை ஒன்று மட்டுமே நமக்கு அழகு!

ஆசிரியர்:அபிராமி கவிதாசன்.
29.10.2024

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading