மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-284. தலைப்பு!

சலவை
……….
மூளைச் சலவை செய்வார் நாட்டில் – அரசியல்
மோசடி ஆட்கள் எல்லாம்
ஓர்படை வீட்டில்!

எத்தனை காலம் ஏமாற்றுவார் மக்களை – அட
அரசியல் வாதிகள் சொல்வார் பொய்களை!

கோவேறு கழுதைகள் என்றும்
குத்திரைகள் ஆகுமா? – ஒரு
கூத்தாடிக் கூட்டத்தால் இந்த
நாடே விடியமா?

கூட்டத்தை வைத்தே நாட்டில்
எடைபோ டாதே – ஒரு
கொள்கை அற்ற கூட்டம்
நிலை கொள்ளாதே!

மாவீரர் கனவை நீ
நனவாக்க மறந்தாயா? – விடுதலை
மறவரை
எண்ணாமல் உயிர் துறந்தாயா?

மாவீரர் கனவையே மறவாது
நனவாக ஆக்கு – ஈழம்
கட்டாயம் மலர நீ
எப்பொழுதும் நோக்கு!

ஈழம் மலராது பல்லோர்
செய்வார் சலவை – அவர்கள்
துண்டாடப் பார்ப்பார்
எம்மக்கள் உறவை!

கார்த்திகைத் திங்கள் புதிதாய்
மலருது பாரடா! – நம்
கவலைகள் எல்லாம் தீரும்
நல்ல நாளடா!

அனுரா அரசியல் அழகாய்
நடக்குது பாரடா! – இனி
அனைத்திலும் நன்மை பிறக்கும் பாரடா!

குழப்படிக் கூட்டம் நடுங்கும் தருணம் இதுவடா – மக்கள்
கூட்டம் ஒன்றாய்க் கூடி
வாழட்டும் இனியடா!

மூளைச் சலவை இங்கே கைக்கூலிகள் தானடா – அந்த
முழு மூடர்கள் நம்மை ஏய்த்திடுவார் பாரடா!

விழிப்புணர் வோடு நீ
இருந்திடப் பழகு! – ஈழ
விடுதலை ஒன்று மட்டுமே நமக்கு அழகு!

ஆசிரியர்:அபிராமி கவிதாசன்.
29.10.2024

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading