அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்.
சென்ற வாரத் தலைப்பு!

உயிர்க் கொடை
…………………………..

மண்ணுயிர் காக்கத்
தன்னுயிர் ஈந்தவர்
மானமும் வீரமும் ஒருங்கே அமைந்தவர்
வீட்டை விடவும் நாட்டை நினைந்தவர்
விடுதலைப் போரில் விளைச்சலில் நிறைந்தவர்!

இளமைப் பருவ உணர்வை மாற்றியர்
என்றும் தேச நலனைப் போற்றியர்
உறவை மறந்து உயிர்க்கொடை நல்கியர்
நிகரிலா ஈகமே நெஞ்சில் பதிந்தவர்!
தலைவர் கட்டளை தாங்கிய மறவர்
தக்க தருணம் தற்கொடை புரிந்தவர்
அலைகடல் கிழித்து நெருப்பாய் வெடித்தவர்
அயலவன் கப்பலை உடைத்து நொறுக்கியர்!

எப்படி யாகிலும் முப்படி மேலாய்
தப்பித மின்றி தாயகம் மீட்க
உயிர்க்கொடை தந்த உறவுகள் கனவை
நனவாய் ஆக்கிட நற்செயல் புரிவோம்!

– கவிஞர் அபிராமி கவிதாசன்.
– 04.12.2024

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading