அவர் அருளின் கையொப்பமாய் வாழ்க்கை

சிறு அணுக்கொண்டு ஆகாயம்வரை அவர் ஆட்சி
ஆரம்பமும் முடிவுமில்லா மஹா சக்தியாக அவர்
மனித அறிவின் எல்லையைத் தாண்டியவர் அவர்
கண்ணால் காண இயலாது ஆனால் காணுமிடத்திலெல்லாம் அவர்

அழுகையின் நடுவில் நம்பிக்கையாய்,
அவமானத்தின் நடுவில் அமைதியாய்,
தோல்வியின் விளிம்பில் துணிவாய்,
வெற்றியின் உச்சியில் பணிவாய் நிற்கிறார்

பாதை தவறிய வேளை நல்வழியாய் அவர்
விழுந்தபோது கைகொடுத்து மீண்டும் எழுப்பியவர்
உலகம் என்னை மறந்தாலும் என்னை மறக்காதவர் அவர்
என் சுவாசம் ஓயும் அந்த நொடியிலும்
உச்சரிக்கும் என் உதடுகள் அவர் பெயர்

ஜெயம்
08-01-2026

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading