நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

அவர் அருளின் கையொப்பமாய் வாழ்க்கை

சிறு அணுக்கொண்டு ஆகாயம்வரை அவர் ஆட்சி
ஆரம்பமும் முடிவுமில்லா மஹா சக்தியாக அவர்
மனித அறிவின் எல்லையைத் தாண்டியவர் அவர்
கண்ணால் காண இயலாது ஆனால் காணுமிடத்திலெல்லாம் அவர்

அழுகையின் நடுவில் நம்பிக்கையாய்,
அவமானத்தின் நடுவில் அமைதியாய்,
தோல்வியின் விளிம்பில் துணிவாய்,
வெற்றியின் உச்சியில் பணிவாய் நிற்கிறார்

பாதை தவறிய வேளை நல்வழியாய் அவர்
விழுந்தபோது கைகொடுத்து மீண்டும் எழுப்பியவர்
உலகம் என்னை மறந்தாலும் என்னை மறக்காதவர் அவர்
என் சுவாசம் ஓயும் அந்த நொடியிலும்
உச்சரிக்கும் என் உதடுகள் அவர் பெயர்

ஜெயம்
08-01-2026

Author: