சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ஆறுதல் யார் தருவார்

ராணி சம்பந்தர்

சொட்டுச் சொட்டானதோ
கொட்டிப் பெருத்த டிட்வா
புயலுடன் கட்டிப் புரண்டே
அயலும் ஒட்டிக்கொண்டது

கரையோடித் திரண்ட அது
நுரை கக்கி மரம், விலங்கு,
வீடென நிரை நிரையாகக்
படகோட்ட கூட்டிச் சென்றது

பெருங்குளம் முட்டி முடைய
வயல் ,வரம்பு ,வாய்க்கால்
தேடி ஓடிப் வீதிப் பாலமும்
மண்ணரித்தே உடைத்தது

துள்ளிக் குதித்த மீன்களை
பள்ளிச் சிறுவர், பெரியவர்
அள்ளிக் குவிக்க அலையும்
காத்திருந்து உடலும் காவிட

துளைத்தெடுத்த மண் சரிவு
உயிரோடு புதைந்த மலையக
வாழ் மானிடரது அழுகுரலும்,
கொதிக்கும் கதறலும் ,பெரு-
மூச்சுக் குதறலும் மூசிடவே
யார்தான் ஆறுதல் தருவாரோ?

Author: