நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

இதுவும் கண் துடைப்பாயிடுமா ?

ராணி சம்பந்தர்

எழுத்துக்களை எழுதிடப் பேனா
எத்தனித்து ஏங்குகிறது
எழுத முடியாமல் கைகள் ஏனோ
நழுவி வீங்குகிறது

நாட்டில் நடக்கும் நடப்புகளோ
கோட்டில் ஏறி இறங்குகிறது
கூட்டில் அடைபட்டும் படாமலும்
பெரும் புள்ளிகள் காட்டிக்
கொடுப்பவரைச் சுட்டிப்
பொசுக்கிறது

அப்பா ,பிள்ளை ,சகோதரர் ,
கூட்டாளிகள் கூடிச் சேர்ந்த
தலைகளின் மர்மம் நசுங்கிப்
பதுங்குகிறது

கண்ணில் ஒத்திச் சேர்த்தது
தாய் மண்ணில் நீதியுடனே
தொங்குமா அல்லது இதுவும்
கண் துடைப்பாயிடுமா ?

Nada Mohan
Author: Nada Mohan