இனியவை

நகுலா சிவநாதன்

இனியவை

காலையில் எழுவது கனிவென நாளும்
மாலையில் மகிழ்வுடன் உரைப்பது நலமே
வேளைகள் தோறும் தேடல்கள் சிறப்பே
வேண்டும் இறையைத் தொழுவது நலமே!

முயற்சிகள் கொண்டு வாழ்வது நன்றே
முயன்று வெல்வது காலத்தின் கனிவே
அயராத உழைப்பே அவனியில் சிறப்பபே!
ஆன்றோர் உரைத்த முதுமொழி நன்றே!

தோல்விகள் இன்றி வெற்றிகள் இல்லை
தேர்வுகள் இன்றி பெறுபேறு இல்லை
வாரிகள் நிறைய வளங்கள் நிறையும்
வாரிசு வாழ அன்பே வேண்டும்

நகுலா சிவநாதன் 1839

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading