” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இயற்கையின் தாண்டவம்

Jeya Nadesan

கவிதை நேரம்-05.12.2024
கவி இலக்கம்-1960
இயற்கையின் தாண்டவம்
——————————
செங்கதிரோன் ஒளியாகி கடலில் தாழும்
காரிருளாக்கி மறைந்து செல்வான்
சேவல் கூவி கோயில் மணி எழுப்பும்
பொன் ஒளி வீச பொலிய வருவான்
பூமாதேவிக்கு சீர் கொண்டு வருவாள்
வானத்துப் பறவைகள் இசை கேட்டு
வாசனை அற்ற மரமாக காணும்
தேன் சேர்க்கும் வண்டுகள் ரீங்காரம்
இலையுதிர் மரங்களிடை களை அழகும்
பச்சைப் பசேலற்ற நெல் வயல்களும்
கொட்டும் மழையுடன் காற்றும் வீசும்
மேகம் இருளும் இடி மின்னல் முழங்கும்
தென்றல் காற்றும் வசந்தமும் வீசி வரும்
சூறாவளியும் பெரு வெள்ளமும் நிரப்பும்
மக்களின் வீடும் வயல்களும் நீர் பரப்பும்
மக்கள் நீரில் மூழ்கி இறப்பும் நடக்கும்
மண் சரிவும் வீடு அழிவும் உயிர்களும் சாகும்
இடப்பெயர்வு கோயில் பாடசாலை தஞ்சமாகும்
ஈழத்தாயின் இயற்கை வளங்களும் அளிந்தே போகும்

Nada Mohan
Author: Nada Mohan