ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

“இயற்கை”—எல்லாளன்-

சந்தம் சிந்தும் சந்திப்பு 229 “இயற்கை”. -நிலம் நீர் காற்று ஆகாயம்
நெருப் இவை ஐந்து ஆதாரம்
தினம் தான் சுற்றி சூரியனை
வலம் வரும் பூமி ஆண்டாக

இயற்கை ஓட்டம் இதுவாக
இரவும் பகலும் தினமாக
சுரக்கும் வெட்ப தட்பமென
சொரியும் நிலவை மாதமென.

விலங்கு,பறவை,பயிர்பச்சை
விதையில் கோடிகரு முட்டை
பலவாய் உலகில் நிதம்உதயம்
படையல் இயற்கை விதி நியமம்

கைரே கையிலே எதிர்காலம்
காண்டம் சந்ததி கதையாவும்
என்றோ தலையில் விதியாயும்
எழுதிய இயற்கை புதிராயும்

ஆன்மா கர்மா வினை என்று
ஆன்றோர் வழிவழி பலவுண்டு
வீணாம் புனைவு இவை என்று
விவா திப்போரும் இங்குண்டு.

உயிரை கருவாய் முதலாக்கி
உணர பெண் ஆண் பாலாக்கி
உருவில் குறி சூழ் உருவாக்கி
உலகில் இயற்கை இறையாகி
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading