வரமாகும் வாய்ப்புகளே ( 751) 26.02.2026

செல்வி நித்தியானந்தன் வரமாகும் வாய்ப்புகளே இயற்கையின் கொடையில் வளமான வாய்ப்புகள் இறைவனின் படைப்பில் பிறப்புஇறப்பு நியதிகள் வாழ்வு என்பதும் வரமான...

Continue reading

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

“இயற்கை”—எல்லாளன்-

சந்தம் சிந்தும் சந்திப்பு 229 “இயற்கை”. -நிலம் நீர் காற்று ஆகாயம்
நெருப் இவை ஐந்து ஆதாரம்
தினம் தான் சுற்றி சூரியனை
வலம் வரும் பூமி ஆண்டாக

இயற்கை ஓட்டம் இதுவாக
இரவும் பகலும் தினமாக
சுரக்கும் வெட்ப தட்பமென
சொரியும் நிலவை மாதமென.

விலங்கு,பறவை,பயிர்பச்சை
விதையில் கோடிகரு முட்டை
பலவாய் உலகில் நிதம்உதயம்
படையல் இயற்கை விதி நியமம்

கைரே கையிலே எதிர்காலம்
காண்டம் சந்ததி கதையாவும்
என்றோ தலையில் விதியாயும்
எழுதிய இயற்கை புதிராயும்

ஆன்மா கர்மா வினை என்று
ஆன்றோர் வழிவழி பலவுண்டு
வீணாம் புனைவு இவை என்று
விவா திப்போரும் இங்குண்டு.

உயிரை கருவாய் முதலாக்கி
உணர பெண் ஆண் பாலாக்கி
உருவில் குறி சூழ் உருவாக்கி
உலகில் இயற்கை இறையாகி
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading