இராசையா கெளரிபாலா

மார்கழி
————
கார்த்திகையில் காத்திருந்து
மார்கழி பூத்திருந்தாள்
தையவளிடம் கைகொடுத்து
தாகத்தைத் தீர்த்தாள்

மாரியில் பெய்த மழையால்
மாதமும் சிறந்ததே
வாரியிறைத்த நீரெல்லாம்
வாரணம் மேவிக் களிக்கவே

ஆற்றுநடை ஊற்றெடுத்து
ஆரவாரித்து கடலை அடைய
சோற்றிற்குப் பஞ்சமில்லை
சேதியெங்கும் விளைச்சல் கும்மியடி

திருவெம்பாவைக் காலம்
திருப்பள்ளி எழவே
அருவமாய் நாயகன் நான்முகன்
திருவடிகள் பக்தர்படை சூழ்ந்திடவே.

இராசையா கௌரிபாலா

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading