மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

இராசையா கெளரிபாலா

மார்கழி
————
கார்த்திகையில் காத்திருந்து
மார்கழி பூத்திருந்தாள்
தையவளிடம் கைகொடுத்து
தாகத்தைத் தீர்த்தாள்

மாரியில் பெய்த மழையால்
மாதமும் சிறந்ததே
வாரியிறைத்த நீரெல்லாம்
வாரணம் மேவிக் களிக்கவே

ஆற்றுநடை ஊற்றெடுத்து
ஆரவாரித்து கடலை அடைய
சோற்றிற்குப் பஞ்சமில்லை
சேதியெங்கும் விளைச்சல் கும்மியடி

திருவெம்பாவைக் காலம்
திருப்பள்ளி எழவே
அருவமாய் நாயகன் நான்முகன்
திருவடிகள் பக்தர்படை சூழ்ந்திடவே.

இராசையா கௌரிபாலா

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading