” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இராசையா கெளரிபாலா

மார்கழி
————
கார்த்திகையில் காத்திருந்து
மார்கழி பூத்திருந்தாள்
தையவளிடம் கைகொடுத்து
தாகத்தைத் தீர்த்தாள்

மாரியில் பெய்த மழையால்
மாதமும் சிறந்ததே
வாரியிறைத்த நீரெல்லாம்
வாரணம் மேவிக் களிக்கவே

ஆற்றுநடை ஊற்றெடுத்து
ஆரவாரித்து கடலை அடைய
சோற்றிற்குப் பஞ்சமில்லை
சேதியெங்கும் விளைச்சல் கும்மியடி

திருவெம்பாவைக் காலம்
திருப்பள்ளி எழவே
அருவமாய் நாயகன் நான்முகன்
திருவடிகள் பக்தர்படை சூழ்ந்திடவே.

இராசையா கௌரிபாலா

Nada Mohan
Author: Nada Mohan