இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

இராசையா கௌரிபாலா

சித்திரையை வாரவேற்போம்
———————————

சித்திரைத் திங்கள் சிறப்பாய் வருகவே
எத்திசை யாவிலும் ஏற்றங்கள் பெற்றடவே
வித்தகம் செய்தே வினைகள் அறுப்பாயே
சித்தம் அதுவே சிறப்பு.

சிறப்புகள் யாவுந்தான் சீருடன் பெற்றுச்
சிறகடித்து வல்லவை சக்திபெற்று வந்தே
பிறக்கும் பொழுதுகள் பொன்னாக என்றும்
அறமும் பெருகிடும் அன்று.

ஊற்றுப் பெருக்காய் உலகில் அகதிகள்
தூற்றுவோம் போரையும் துப்பாக்கி இன்றியே
ஏற்றுவோம் நீதியை ஏற்றங்கள் காணவே
மாற்றல் உலக முறை.

முறைகளில் மாற்றங்கள் முற்றிலும் வேண்டும்
சிறைப்பட்ட மக்களின் சீரான வாழ்வில்
கறைகள் களைந்து களங்கமும் அற்றே
நிறைவாய் அமைந்திடுமே நாள்.

இராசையா கௌரிபாலா.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading