மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

இராசையா கௌரிபாலா

சித்திரையை வாரவேற்போம்
———————————

சித்திரைத் திங்கள் சிறப்பாய் வருகவே
எத்திசை யாவிலும் ஏற்றங்கள் பெற்றடவே
வித்தகம் செய்தே வினைகள் அறுப்பாயே
சித்தம் அதுவே சிறப்பு.

சிறப்புகள் யாவுந்தான் சீருடன் பெற்றுச்
சிறகடித்து வல்லவை சக்திபெற்று வந்தே
பிறக்கும் பொழுதுகள் பொன்னாக என்றும்
அறமும் பெருகிடும் அன்று.

ஊற்றுப் பெருக்காய் உலகில் அகதிகள்
தூற்றுவோம் போரையும் துப்பாக்கி இன்றியே
ஏற்றுவோம் நீதியை ஏற்றங்கள் காணவே
மாற்றல் உலக முறை.

முறைகளில் மாற்றங்கள் முற்றிலும் வேண்டும்
சிறைப்பட்ட மக்களின் சீரான வாழ்வில்
கறைகள் களைந்து களங்கமும் அற்றே
நிறைவாய் அமைந்திடுமே நாள்.

இராசையா கௌரிபாலா.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading