இரா விஜயகௌரி

வளர்ந்த புழந்தைகள் தாமே……….

வனப்பும் வலிமையும்
எழுச்சியும். ஏற்றமும்
சுழற்சியின். விசையும்
கொண்டெழும். குழந்தைகள்

வேஷம் களைந்த
வேதியல் கலப்பு -இவர்
நுண்ணறிவினைத். தொடுகின்
நுழைந்தெழும் பேரிழை

வித்துவக். காச்சலை
விரல் நுனிக்குள். பதுக்கி
அழுத்தி. எழுந்தால்
அசத்திடும். குழந்தை

இறைதரும் பெருவரம்
ஏற்றவர். கடவுளர்
குற்றம் காணா குரவர்கள்
குதூகலம் சமைக்கும் சமர்க்களம்

இயல்பினை. மறந்து
இதயத்துள் நழைந்து
மாண்புறு. வாழ்வினில்
மகிழ்வெழுதிடும் மைந்தர் தாம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading