இரா விஜயகௌரி

வளர்ந்த புழந்தைகள் தாமே……….

வனப்பும் வலிமையும்
எழுச்சியும். ஏற்றமும்
சுழற்சியின். விசையும்
கொண்டெழும். குழந்தைகள்

வேஷம் களைந்த
வேதியல் கலப்பு -இவர்
நுண்ணறிவினைத். தொடுகின்
நுழைந்தெழும் பேரிழை

வித்துவக். காச்சலை
விரல் நுனிக்குள். பதுக்கி
அழுத்தி. எழுந்தால்
அசத்திடும். குழந்தை

இறைதரும் பெருவரம்
ஏற்றவர். கடவுளர்
குற்றம் காணா குரவர்கள்
குதூகலம் சமைக்கும் சமர்க்களம்

இயல்பினை. மறந்து
இதயத்துள் நழைந்து
மாண்புறு. வாழ்வினில்
மகிழ்வெழுதிடும் மைந்தர் தாம்

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading