அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

இரா விஜயகௌரி

வளர்ந்த புழந்தைகள் தாமே……….

வனப்பும் வலிமையும்
எழுச்சியும். ஏற்றமும்
சுழற்சியின். விசையும்
கொண்டெழும். குழந்தைகள்

வேஷம் களைந்த
வேதியல் கலப்பு -இவர்
நுண்ணறிவினைத். தொடுகின்
நுழைந்தெழும் பேரிழை

வித்துவக். காச்சலை
விரல் நுனிக்குள். பதுக்கி
அழுத்தி. எழுந்தால்
அசத்திடும். குழந்தை

இறைதரும் பெருவரம்
ஏற்றவர். கடவுளர்
குற்றம் காணா குரவர்கள்
குதூகலம் சமைக்கும் சமர்க்களம்

இயல்பினை. மறந்து
இதயத்துள் நழைந்து
மாண்புறு. வாழ்வினில்
மகிழ்வெழுதிடும் மைந்தர் தாம்

Nada Mohan
Author: Nada Mohan