மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

இரா.விஜயகௌரி

சித்திரை மீண்டும் இத்தரையில்……..

சித்திரை மகளாள் இத்தரை மீதினில்
சித்திர விடியலை நிறைத்தெழுவாள் -அவள்
இத்தனை கணமும் தாங்கிடும் துயரினை
கரைத்தொரு பொழுதினை தந்தெழுவாள்

பசியும் பிணியும் தாங்கிடும் நொடிகள்
வையகம் நொய்ந்து தவிக்கிறதே
ஆதிக்க வெறியரின் ஆக்கினைக்குள்ளே
அமிழ்ந்திடும். வெந்தணல் அணைந்திடுமோ

ஒற்றுமையின்றிய. சூழலின் நொடிகள்
உய்வுறு வாழ்வினை கலைத்தெழுதும்
உன்னத நெறிகளை. உள்ளம்ஏற்றொரு
அமைதியின் ஒளிதனில் வாழ்வு வெல்வோம்

பூத்தவள் இங்கு புத்துயிர்ப்பெழுதி
சிந்தனை சீர் பெற மாற்றி எழின்
தொடர்கின்ற பொழுதும் தொடரும் செயலும்
நலம் பெறும் வளம் பெறும் சீர் நிறைக்கும்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading