மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

இரா.விஜயகௌரி

சித்திரை மீண்டும் இத்தரையில்……..

சித்திரை மகளாள் இத்தரை மீதினில்
சித்திர விடியலை நிறைத்தெழுவாள் -அவள்
இத்தனை கணமும் தாங்கிடும் துயரினை
கரைத்தொரு பொழுதினை தந்தெழுவாள்

பசியும் பிணியும் தாங்கிடும் நொடிகள்
வையகம் நொய்ந்து தவிக்கிறதே
ஆதிக்க வெறியரின் ஆக்கினைக்குள்ளே
அமிழ்ந்திடும். வெந்தணல் அணைந்திடுமோ

ஒற்றுமையின்றிய. சூழலின் நொடிகள்
உய்வுறு வாழ்வினை கலைத்தெழுதும்
உன்னத நெறிகளை. உள்ளம்ஏற்றொரு
அமைதியின் ஒளிதனில் வாழ்வு வெல்வோம்

பூத்தவள் இங்கு புத்துயிர்ப்பெழுதி
சிந்தனை சீர் பெற மாற்றி எழின்
தொடர்கின்ற பொழுதும் தொடரும் செயலும்
நலம் பெறும் வளம் பெறும் சீர் நிறைக்கும்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading