தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

இரா விஜயகௌரி

ஆற்றலும் ஆளுமையும் …….

பேராற்றல் மிக்கவனே மனிதன்
பேருண்மை புரிந்தெழுந்தால் பெருமை
விழுமியங்கள் கடந்தெழுந்து பதிக்கும்
வித்தகத்தின் தனித்துவமே செழுமை

தத்துவங்கள் நித்தமுமாய் பிறக்கும்
தனித்துவமே நிமிர்ந்தெழுத உழைக்கும்
வெற்றியினை பதித்தெழுதும் கரங்கள்
வேர்விட்டு விழுதுகளை. படைக்கும்

உந்தனை நீ உயிர்பபித்து எழுந்து
உள்ளாளும்உன் செழுமை வடித்து
விழுந்தெழுந்தும். வீரியத்தை இழக்கா
உயர் நிலையில் உன்னதங்கள் சிறக்கும்

ஆளைமையை உடையவனே மனிதன்
அதை ஆள்வதற்கும் பெரும் பலமே வேண்டும்
கற்றறிந்த வித்தையொடு உந்தன்
தனித்துவத்தின் புள்ளி தனைத் தொடுவாய்

இன்றல்ல வாழ்க்கையதன் பக்கம்
என்றென்றும் உன் சாதனையால். வாழ்வாய்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading