இரா விஜயகௌரி

ஆற்றலும் ஆளுமையும் …….

பேராற்றல் மிக்கவனே மனிதன்
பேருண்மை புரிந்தெழுந்தால் பெருமை
விழுமியங்கள் கடந்தெழுந்து பதிக்கும்
வித்தகத்தின் தனித்துவமே செழுமை

தத்துவங்கள் நித்தமுமாய் பிறக்கும்
தனித்துவமே நிமிர்ந்தெழுத உழைக்கும்
வெற்றியினை பதித்தெழுதும் கரங்கள்
வேர்விட்டு விழுதுகளை. படைக்கும்

உந்தனை நீ உயிர்பபித்து எழுந்து
உள்ளாளும்உன் செழுமை வடித்து
விழுந்தெழுந்தும். வீரியத்தை இழக்கா
உயர் நிலையில் உன்னதங்கள் சிறக்கும்

ஆளைமையை உடையவனே மனிதன்
அதை ஆள்வதற்கும் பெரும் பலமே வேண்டும்
கற்றறிந்த வித்தையொடு உந்தன்
தனித்துவத்தின் புள்ளி தனைத் தொடுவாய்

இன்றல்ல வாழ்க்கையதன் பக்கம்
என்றென்றும் உன் சாதனையால். வாழ்வாய்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading