இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

இரா.விஜயகௌரி

வாழ்வு ஒரு வட்டம்

புலரும் பொழுதுகளின்
எழில் வர்ணம் தீட்டி
இனிய தருணங்களை
எழுதி வரும் பெருவாழ்வு

மேடும் பள்ளமும். இங்கு
தீதும் இனிதுமென
தினமும் மாறி வரும்
எதிர் கொண்டெழுதல். பலம்

இன்று. வாழ்த்துதலும். -நாளை
தூற்றுதலும் அவரவர் எண்ணத்தில்
மனம் ஏற்று நலிந்தொழிந்தால்
நாமே துவண்டழுவோம்

பேதை. மனிதர்கள். நாம்
வாதை வலி சுமந்து நாம்
தோள்கள. வலுவிழந்து
பெரு வாழ்வை. வழியை அழிப்பதுவோ

நம்மை நாமுணரின்- நம்
பலத்தை வலுவெழுதின்
நேர்ந்த நிமிர் நடையும் -அந்த
செருக்கின். பெருமை. சொல்வோம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading