” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இரா.விஜயகௌரி

பள்ளிக்காலம்

துள்ளித்திரிந்த காலம்
துடிப்பை நிறைத்த செயல்கள்
ஆளுமை தொடுத்த நொடிகள்
அடங்கா வேகத்தின் முனைப்பு

கவலைகள் கணத்திலும் இல்லை
கனிந்தெழும் நட்பின் இழைவு
வேரினை பலமாய் நிலைத்து
நாளைய. பொழுது அதன். அடிக்கல்

செயல்கொள் வீரத்தின். தொடுகை
சிந்தனைத் திறனதன். பாய்ச்சல்
அழகாம் வாழ்வதன் செழிப்பு
அங்கு பூத்தெழும் மலர்களாய் வார்ப்பு

சொர்க்கத்தை பூமியில் வரைந்தால்
பள்ளியின் வாயிலை நோக்கும்
எழிலாம் இளமையின் அழகை
இழைத்து நெய்தெழும் பள்ளி

Nada Mohan
Author: Nada Mohan