இரா.விஜயகௌரி

ஒளியின்றி ஒளிர்வெங்கு……..

விழியின்றி. ஒளியில்லை
ஒளிர்வதற்கு. வழியுமில்லை
வழிகாட்டும் வாழ்வின்றேல்
ஒளிமுகத்தை உணர்வதெப்போ

தெளிவெழுதும் வார்த்தைகளும்
தென்றலொத்த தழுவல்களும்
கையிணைத்த உறவிணைவும்
ஒளிர்வெழுதி உயர்வு செப்பும்

பட்டுக்கும் பகட்டுக்கும்-தினம்
பவனிவரும். மாந்தர் முன்னே
அக ஒளியை. ஏற்றி வைக்கும்
அறிவின் விடியலைத்தான் ஒளிர்வென்போம்

தாழ்வின் பக்கலிலே தவிப்போர்க்கு
ஏற்றத்தின் சிறு பொறியை உணர்த்தி
தொடுபுள்ளி. இட்டெழுவோர் -ஆங்கு
பெரு வெளிச்சத்தின் சிறு பொறிகள்

ஆம் கருமைக்குள் கசங்கிவதோ
கவலைக்குள் மூழ்கிவதோ-நாம்
வாழப்பிறந்தவர்கள். பிறர்
வாழ்வுக்கும் வழி தொடுப்போர்
அகவொளி ஏற்றி விடியல் செய்வோம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading