” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இரா.விஜயகௌரி

ஒளியின்றி ஒளிர்வெங்கு……..

விழியின்றி. ஒளியில்லை
ஒளிர்வதற்கு. வழியுமில்லை
வழிகாட்டும் வாழ்வின்றேல்
ஒளிமுகத்தை உணர்வதெப்போ

தெளிவெழுதும் வார்த்தைகளும்
தென்றலொத்த தழுவல்களும்
கையிணைத்த உறவிணைவும்
ஒளிர்வெழுதி உயர்வு செப்பும்

பட்டுக்கும் பகட்டுக்கும்-தினம்
பவனிவரும். மாந்தர் முன்னே
அக ஒளியை. ஏற்றி வைக்கும்
அறிவின் விடியலைத்தான் ஒளிர்வென்போம்

தாழ்வின் பக்கலிலே தவிப்போர்க்கு
ஏற்றத்தின் சிறு பொறியை உணர்த்தி
தொடுபுள்ளி. இட்டெழுவோர் -ஆங்கு
பெரு வெளிச்சத்தின் சிறு பொறிகள்

ஆம் கருமைக்குள் கசங்கிவதோ
கவலைக்குள் மூழ்கிவதோ-நாம்
வாழப்பிறந்தவர்கள். பிறர்
வாழ்வுக்கும் வழி தொடுப்போர்
அகவொளி ஏற்றி விடியல் செய்வோம்

Nada Mohan
Author: Nada Mohan