” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இரா.விஜயகௌரி

மனிதத்தின். நேயமே………..

மனிதத்தின். நேயமே
மாண்புறு. நேயமே
வேஷத்தைக் கலைத்தெழும்
வித்தாகும். உயிர்த்துளி

உணர்ந்தெழும் சிறுநொடி
உணர்வோடு கலந்தெழும்
பாகுபாட்டினை அறுத்தொரு
பகுத்தறிவினில் விளைந்தெழும்

அனுதின வாழ்வினில் நிதம்
அனைத்திலும் தொடுத்தெழின்
ஆயிரம் சிக்கல்கள்
அனுசரணையுள் விலகிடும்

தேசத்தின். மைந்தர்கள்
நேசத்துள் இழைத்தெழ
மாபெரும் மாண்பினுள்
மகிழ்ந்தெழும். உறவினுள்

கருவினுள் முகிழ்ந்தெழும்
கருணையுள் புடமிடும்
காத்தெழும் வளர்ப்பினுள்
வாழ்க்கையாய் வளமிடும்

மனிதத்தின். நேயமே
மாபெரும். சக்தியாய்
உலவிட. உயர்விட
நித வாழ்க்கையே அழகு. தான்

Nada Mohan
Author: Nada Mohan