” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இரா விஜயகௌரி

பொய்யகற்றி. பொருள் கொடுப்போம்…………..

தாயகத்தின் உறவுகளை
காப்பதெங்கள் பணியென்று
சிறுகச்சிறுக. சேமித்தும்
உதவியெழும் உறவுகளே பெருநன்றி

பல்வேறு தளம் கொண்டு-தம்
நேசக்கரம் இணைக்கும் பெருந்தகையீர்
உம்மைத்தான் வேண்டுகின்றேன்
உண்மை விளம்பி உரைத்திடுவீர்

நம்பிக்கை மோசடிகள் நமக்குள்ளே
பேசும் வார்த்தைக்குள் பாசத்தை
கூட்டி எடுத்திழையும் நம்மவரை. நீவிர்
எதுவென நினைத்து. பெரும் கபடங்கள்

முகத்திரைகள் கிழியும் முடிவு. வரும்
ஏழைத்தாயவளின் கை கொடுக்க
நம்பி வந்த சிறு பொதிகள் உங்கள்
ஆடம்பர சொகுசுகளுள். பதுங்குவதோ

நாங்களெல்லாம் மூடரல்ல மூடரல்ல
யாவையும் அறிந்து கொள்வோம்
சிதைந்தழிவீர் உங்கள் சில்லறைத்தனத்தால்
இன்றே இன்றே சூது கபட நாடகங்கள்
ஏமாற்று
அத்தனையும் ஒழித்து நலன் செய்வீர்

Nada Mohan
Author: Nada Mohan