இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 191
சித்திரை வந்தாலே

பட்சிகளின் இனியகானம் கேட்குமே
வர்ணமலர்கள் கண்ணை கவருமே
கூடவே ஒவ்வாமை வருமே
பலரின் வதனத்தில் கவலை தெரியுமே

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
எல்லாம் தொடங்கும் நேரம்
இளையோர் சோடி தேடும் நேரம்
அரசுக்கு வருமானம் வந்திடும் நேரம்

இயேசுபிரானின் இறப்பு உயிர்ப்பு
நான்கு நாட்கள் விடுமுறை களிப்பு
களைகட்டும் கோவில் திருவிழாக்கள்
குதூகளிப்பில் மக்கள் எல்லோரும்
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading