ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

இ. உருத்திரேஸ்வரன்

கவிதை 172
வேண்டும் வலிமை
வாழ்வில் வேண்டும் வலிமை
வஞ்சனை நிறைந்த உலகம்
நெஞ்சில் வேண்டும் வலிமை
வருங்காலம் உந்தன் கையில்

உடல் வலிமை குறைந்தாலும்
உள்ளத்தில் வலிமையிருந்தால்
தடையை தாண்டி வீறு நடை போட
தரணியும் உனது கையில்

தன்னை விட மற்றவரை
வலிமையாக்குவது உன் வலிமை
வலிகள் தாங்கும் வலிமையிருந்தால்
வசந்தமாகும் உந்தன் வாழ்க்கை
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading