இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 206
வழிகாட்டிகள்

இல்லத்தில் பெற்றோர் வழிகாட்டிகள்
கல்விக்கு ஆசான் வழிகாட்டி
தோன்றும் துயர் துடைக்க
துணிச்சல் நல்ல வழிகாட்டி

வீதியில் நல்ல வழிகாட்டிகள்
விபத்தை விலக்கும் குறியீடு
பாதை தேடும் படகோடிக்கு
நட்சத்திரங்கள் வழிகாட்டி

சிறுவர் இளையோருக்கு வழிகாட்டி
வாணி நடாமோகனின் பாமுகம்
வாழ்வு தந்த அனுபவம்
வாழ்நாள் முடிவில் வழிகாட்டி
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading