இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 216
கடந்து வந்த பாதையில்

கடந்து வந்த பாதையில்
திரும்பி பார்த்தேன் என்னை
தூரமோ மிக அதிகம்
செய்ததோ மிக சொற்பமே

கல்லும் மணலும் முள்ளும்
நிறைந்த பாதையை கடந்தது
அனுபவமாக மாறியது
உண்மையை உணரவைத்தது

சுவையும் துன்பமும் இருந்தது
கடந்து வந்த வழியிலே
இருந்தும் எனது இலக்கை
அடைந்தது மகிழ்வே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading