” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இ உருத்திரேஸ்வரன் Swiss.

வெறுமை போக்கும் பசுமை..!
கவிதை 195

கட்டாந்தரையை பசுமை ஆக்கும்
சிற்பியான உழவன் வாழ்வில்
வெறுமை நீங்கி பசுமை மேலோங்க
வியர்வை சிந்தும் உழைப்பே

தருக்கள் நட்டு புவனத்தை பசுமையாக்க
புவனமோ குளிர்மையடைந்திட
உணவுப் பஞ்சம் மறைந்திட
எல்லோரும் மகிழ்வுடன் வாழ்வோமே

வெறுமை நிலத்தை பார்த்த கண்கள்
பசுமை நிலத்தை பார்த்திட
மனமும் மகிழ்வில் மிதக்க
பிறக்குமே மெய்யில் உற்சாகம்

– இ உருத்திரேஸ்வரன்
Swiss.

Nada Mohan
Author: Nada Mohan