சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

இ உருத்திரேஸ்வரன் Swiss.

வெறுமை போக்கும் பசுமை..!
கவிதை 195

கட்டாந்தரையை பசுமை ஆக்கும்
சிற்பியான உழவன் வாழ்வில்
வெறுமை நீங்கி பசுமை மேலோங்க
வியர்வை சிந்தும் உழைப்பே

தருக்கள் நட்டு புவனத்தை பசுமையாக்க
புவனமோ குளிர்மையடைந்திட
உணவுப் பஞ்சம் மறைந்திட
எல்லோரும் மகிழ்வுடன் வாழ்வோமே

வெறுமை நிலத்தை பார்த்த கண்கள்
பசுமை நிலத்தை பார்த்திட
மனமும் மகிழ்வில் மிதக்க
பிறக்குமே மெய்யில் உற்சாகம்

– இ உருத்திரேஸ்வரன்
Swiss.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading