மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

உணர்வுகள் வழிப்பட,,,,,,,

நேவஸ் பிலிப் கவி இல (357). 21/11/24

மலர்ந்த நல்லாட்சியிலே
மக்கள் மனங்கள் மகிழட்டும்
நேசங்கள் நெஞ்சில் நிறைய
பாசங்கள் அன்பாய் பொழியட்டும்

புரிதல்கள் பூத்து விட்டால்
புன்னகை மலர் விரியும்
நெறிகள் துளிர்த்து விட்டால்
நேர்மை வழி காட்டும்

உள இறுக்கம் தளரின்
மன நெருக்கம் நிகழும்
உறவுகள் மெய்ப்பட
உரிமைகள் கை கொடுக்கும்

களவும் கயமையும் ஒழியட்டும்
லஞ்சமும் வஞ்சமும் அகலட்டும்
மனித கரங்கள் இணையட்டும்
நாட்டில் ஒற்றுமை நிலவட்டும்

மாறி விட்ட ஆட்சியிலே
மனித நேயம் மலர மாண்பு பெருக
வானும் மண்ணும் செழிக்கட்டும்
வறுமை அகல உறவுகள் சிறக்கட்டும்..
நன்றி வணக்கம்…….

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading