சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

உணர்வுகள் வழிப்பட,,,,,,,

நேவஸ் பிலிப் கவி இல (357). 21/11/24

மலர்ந்த நல்லாட்சியிலே
மக்கள் மனங்கள் மகிழட்டும்
நேசங்கள் நெஞ்சில் நிறைய
பாசங்கள் அன்பாய் பொழியட்டும்

புரிதல்கள் பூத்து விட்டால்
புன்னகை மலர் விரியும்
நெறிகள் துளிர்த்து விட்டால்
நேர்மை வழி காட்டும்

உள இறுக்கம் தளரின்
மன நெருக்கம் நிகழும்
உறவுகள் மெய்ப்பட
உரிமைகள் கை கொடுக்கும்

களவும் கயமையும் ஒழியட்டும்
லஞ்சமும் வஞ்சமும் அகலட்டும்
மனித கரங்கள் இணையட்டும்
நாட்டில் ஒற்றுமை நிலவட்டும்

மாறி விட்ட ஆட்சியிலே
மனித நேயம் மலர மாண்பு பெருக
வானும் மண்ணும் செழிக்கட்டும்
வறுமை அகல உறவுகள் சிறக்கட்டும்..
நன்றி வணக்கம்…….

Nada Mohan
Author: Nada Mohan