மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

உதிர்கின்ற இலைகளே,,!!!!!,

நேவிஸ் பிலிப் கவி இல (151) 17/10/24

அரும்பாகி தளிராகி
துளிராகி இலையாகி
பூவோடும் பிஞ்சோடும்
காயோடும் கனியோடும்
உறவாடி விளையாடி
தென்றலில் அசைந்தாடி

குளிர் நிழல் பரப்பி
பச்சை வண்ணமாய்
பசும் சோலையாய் படர்ந்து

ஒளி சேர்க்கை பணியாற்றி
கார்காலம் வரக் கண்டு
கடமை முடிந்ததென
மரத்திற்கு பாரமின்றி
தயங்கா உள்ளமுடன்
உதிர்ந்திட்ட இலைகளே

பழுப்பும் மஞ்சளுமாய்
பார்த்த இடமெங்கும்
அலைபோல புரள்கின்ற
உதிர்ந்திட்ட இலைகளே

வீழினும் உரமாக
இலையாய் பிறந்திடனினும்
இதுவே உயர்ந்த நிலை
வாழ்வின் மறு பிறவியாய்
கிளைகளில் மீண்டும் துளித்திடுவீர்.

நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading