உதிர்கின்ற இலைகளே

இ.உருத்திரேஸ்வரன்

இருக்கின்ற காலம் மரத்திற்கு
பாரமாய் இருந்ததில்லை அவை
மரத்திற்கு உணவு கொடுத்து
பிராணவாயுவை தந்தது பூமிக்கு

உங்கள் கடமை முடிந்து
உதிர்ந்து விழும் இலைகளே
உரமாக மண்ணுக்கும் உணவாக விலங்குக்கும்
நன்மை செய்வீர்கள் உலகிற்கு

இவற்றைப் பார்த்து நாமும்
சமூகத்திற்கும் அடுத்த தலைமுறைக்கும்
உதிரப்போகின்ற நாமும்
செய்வோமே நல்லதையே
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading