மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

உதிர்கின்ற இலைகளே

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 2044!!

“உதிர்கின்ற இலைகளே”…

உடுக்கை இழந்தவன்
கைபோல் ஆங்கே
இடுக்கண் களைந்திட
முயன்றிடா மாந்தரினம்
தரு தன் ஆடை உதிர்க்க
தருணமிது என்கிறதோ
பச்சை ஆடை போர்த்தி
பள பளத்த மேனியெல்லாம்
போராடித் தீர்த்த பின்னே
தரையில் வீழ்வதோ…

கருவறுக்கும் கயமையோ
காலச் சக்கரத்தின் சுழல்
அன்றி விதியோ சதியோ
இயற்கை நியதியோ
எதுவென்று இயம்பிட
பசுமை தன் வண்ணமிழக்க
பாழும் வரட்சி வந்து கழுத்தறுக்க
யாதென உணர்ந்திட முடியா…

உதிர்கின்ற இலைகளே
உரைத்திடுக ஓர் நீதி
துளிர்த்தாலும் தருவுக்கு
உடையாவீர் நாளும்
உதிர்ந்தாலும் மண்ணுக்கே
உரமான வள்ளண்மை
மூப்பின் பிடியில்
மரணமே முடிவென்று
சொல்லியே செல்கிறீரோ..!!
சிவதர்சனி இராகவன்

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading