30
Jul
29
Jul
நட்பென்றாலே
நட்பென்றாலே
உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு
எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு
ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு
உயிர்காக்கும்...
29
Jul
நட்பென்றாலே…
வசந்தா ஜெகதீசன்
நட்பென்றாலே...
நட்பின் தொடக்கம் நல்லிதய இணைவு
நட்பே எங்கள் உயிரின் இணை
நட்பே...
உதிர்கின்ற இலைகளே
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2044!!
“உதிர்கின்ற இலைகளே”…
உடுக்கை இழந்தவன்
கைபோல் ஆங்கே
இடுக்கண் களைந்திட
முயன்றிடா மாந்தரினம்
தரு தன் ஆடை உதிர்க்க
தருணமிது என்கிறதோ
பச்சை ஆடை போர்த்தி
பள பளத்த மேனியெல்லாம்
போராடித் தீர்த்த பின்னே
தரையில் வீழ்வதோ…
கருவறுக்கும் கயமையோ
காலச் சக்கரத்தின் சுழல்
அன்றி விதியோ சதியோ
இயற்கை நியதியோ
எதுவென்று இயம்பிட
பசுமை தன் வண்ணமிழக்க
பாழும் வரட்சி வந்து கழுத்தறுக்க
யாதென உணர்ந்திட முடியா…
உதிர்கின்ற இலைகளே
உரைத்திடுக ஓர் நீதி
துளிர்த்தாலும் தருவுக்கு
உடையாவீர் நாளும்
உதிர்ந்தாலும் மண்ணுக்கே
உரமான வள்ளண்மை
மூப்பின் பிடியில்
மரணமே முடிவென்று
சொல்லியே செல்கிறீரோ..!!
சிவதர்சனி இராகவன்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...