ஊரெழுவின் மெழுகுவர்த்தி

ரஜனி அன்ரன் ( B.A ) “ ஊரெழுவின் மெழுகுவர்த்தி “ 18.09.2025

உலகே விழித்திருக்க ஊரெல்லாம் பார்த்திருக்க
உருகஉருக உருக்கியது தன்னைத்தானே
உணர்த்தியது அறப்போரை
ஊரெழுவின் மெழுகுவர்த்தி
உடலும் மருத்துவத்திற்கு
உணர்வும் தமிழுக்குமென
உரமாக்கியதே உயிரினைத் தமிழ்வேருக்கு !

வேருக்கு உரமாகி வேட்கையின் குறியாகி
அறவழிநின்று அகிம்சை கொண்டு
ஆன்மபலத்தில் உலகை வென்று
இனத்தின் துயரைத் துடைக்கவென்று
மனத்தை இறுக்கி உயிரையே ஈந்த
உணவினை வெறுத்த உன் உயிர்த்தீபம்
உணர்வாக எம்நெஞ்சில் சுடரானதே !

சுடரொளி நீதான் சுவடும்நீதான்
தமிழ்வேருக்கு உரமான தியாகியும் நீதான்
நல்லூரான் வீதியிலே நடந்த வேள்வியில்
ஊரெழுவின் மெழுகுவர்த்தி
ஊரறிய உலகறிய தீப்பொறியாச்சுதே !

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading