மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ஊரெழுவின் மெழுகுவர்த்தி

ரஜனி அன்ரன் ( B.A ) “ ஊரெழுவின் மெழுகுவர்த்தி “ 18.09.2025

உலகே விழித்திருக்க ஊரெல்லாம் பார்த்திருக்க
உருகஉருக உருக்கியது தன்னைத்தானே
உணர்த்தியது அறப்போரை
ஊரெழுவின் மெழுகுவர்த்தி
உடலும் மருத்துவத்திற்கு
உணர்வும் தமிழுக்குமென
உரமாக்கியதே உயிரினைத் தமிழ்வேருக்கு !

வேருக்கு உரமாகி வேட்கையின் குறியாகி
அறவழிநின்று அகிம்சை கொண்டு
ஆன்மபலத்தில் உலகை வென்று
இனத்தின் துயரைத் துடைக்கவென்று
மனத்தை இறுக்கி உயிரையே ஈந்த
உணவினை வெறுத்த உன் உயிர்த்தீபம்
உணர்வாக எம்நெஞ்சில் சுடரானதே !

சுடரொளி நீதான் சுவடும்நீதான்
தமிழ்வேருக்கு உரமான தியாகியும் நீதான்
நல்லூரான் வீதியிலே நடந்த வேள்வியில்
ஊரெழுவின் மெழுகுவர்த்தி
ஊரறிய உலகறிய தீப்பொறியாச்சுதே !

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading