ஊரெழுவின் மெழுகுவர்த்தி

ரஜனி அன்ரன் ( B.A ) “ ஊரெழுவின் மெழுகுவர்த்தி “ 18.09.2025

உலகே விழித்திருக்க ஊரெல்லாம் பார்த்திருக்க
உருகஉருக உருக்கியது தன்னைத்தானே
உணர்த்தியது அறப்போரை
ஊரெழுவின் மெழுகுவர்த்தி
உடலும் மருத்துவத்திற்கு
உணர்வும் தமிழுக்குமென
உரமாக்கியதே உயிரினைத் தமிழ்வேருக்கு !

வேருக்கு உரமாகி வேட்கையின் குறியாகி
அறவழிநின்று அகிம்சை கொண்டு
ஆன்மபலத்தில் உலகை வென்று
இனத்தின் துயரைத் துடைக்கவென்று
மனத்தை இறுக்கி உயிரையே ஈந்த
உணவினை வெறுத்த உன் உயிர்த்தீபம்
உணர்வாக எம்நெஞ்சில் சுடரானதே !

சுடரொளி நீதான் சுவடும்நீதான்
தமிழ்வேருக்கு உரமான தியாகியும் நீதான்
நல்லூரான் வீதியிலே நடந்த வேள்வியில்
ஊரெழுவின் மெழுகுவர்த்தி
ஊரறிய உலகறிய தீப்பொறியாச்சுதே !

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading