28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
ஊரெழுவின் மெழுகுவர்த்தி
ரஜனி அன்ரன் ( B.A ) “ ஊரெழுவின் மெழுகுவர்த்தி “ 18.09.2025
உலகே விழித்திருக்க ஊரெல்லாம் பார்த்திருக்க
உருகஉருக உருக்கியது தன்னைத்தானே
உணர்த்தியது அறப்போரை
ஊரெழுவின் மெழுகுவர்த்தி
உடலும் மருத்துவத்திற்கு
உணர்வும் தமிழுக்குமென
உரமாக்கியதே உயிரினைத் தமிழ்வேருக்கு !
வேருக்கு உரமாகி வேட்கையின் குறியாகி
அறவழிநின்று அகிம்சை கொண்டு
ஆன்மபலத்தில் உலகை வென்று
இனத்தின் துயரைத் துடைக்கவென்று
மனத்தை இறுக்கி உயிரையே ஈந்த
உணவினை வெறுத்த உன் உயிர்த்தீபம்
உணர்வாக எம்நெஞ்சில் சுடரானதே !
சுடரொளி நீதான் சுவடும்நீதான்
தமிழ்வேருக்கு உரமான தியாகியும் நீதான்
நல்லூரான் வீதியிலே நடந்த வேள்வியில்
ஊரெழுவின் மெழுகுவர்த்தி
ஊரறிய உலகறிய தீப்பொறியாச்சுதே !
Author: ரஜனி அன்ரன்
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...