மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

எதற்கு ?

ராணி சம்பந்தர்

13.06.24
ஆக்கம் 320
எதற்கு

விண்ணிலே வினோதம்
ஆன வீரமெதற்கு
மண்ணிலே மகிழ்வுடன்
வாழ்வதற்கு

கண்ணில் காணும் காட்சி எதற்கு
அண்ணாந்தவுடன்
ஆனந்தமாவதற்கு
துன்பந்தரும் அன்றாட
செயலோ தூர விலகிடும் உள்ளமதை
அரவணைப்பதற்கு

இறைவன் தந்த கரம்
எதற்கெனில் இயன்ற வரை துதிப்பதற்கு
ஆழப் பதிந்த கால்களோ
கோழையின்றி நிமிர்ந்து நிற்பதற்கே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading